தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறவிருந்த நிலையில், நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் அமைச்சர்களை மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் அனுப்பியுள்ளார்.
இதனால், தமிழக அமைச்சரவைக் கூட்டமானது நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.