நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

News image

வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரையில் இருந்த கருமாதி கொட்டகை அப்படியே விழுந்து நொருங்கியது.

Updated On :19 நவம்பர் 2021, 11:39 am IST


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

விழுப்புரம் அருகே தளவானூர் கிராமத்தில் உள்ள தடுப்பணை பழுதான தால் அதை வெடிவைத்து தகர்க்கும் பணி கடந்த வாரம் நடந்தது‌ ஆனால் அம்முயற்சி தோல்வி அடைந்தது.

இதற்கிடையே வியாழக்கிழமை இரவு பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் சாத்தனூர் அணையில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 6 மணி அளவில் வினாடிக்கு 51,000 கன அடி நீர் திறக்கப்பட்டதால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்நிலையில், வெள்ளப்பெருக்கால் தளவானூர் அணையில் இடது கரையில் மண் அரிப்பு மேலும் விரிவடைந்தது வருகிறது. அணையை உடைக்க நிறுத்தப்பட்டிருந்த மிதவை பொக்லைன் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இழுத்து செல்லப்பட்டு சிக்கி கிடக்கிறது.

ஆற்றங்கரையில் இருந்த கருமாதி கொட்டகை அப்படியே விழுந்து நொருங்கியது. ஆற்றங்கரையில் இருந்த பழமையான 3 புளிய மரங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தளவானூர் அருகே திருப்பாச்சனூர் தரைப்பாலமும் வெள்ள நீரில் மூழ்கியது.

இதனால் தளவானூர், திருப்பாயச்சனூர், தெற்கு குச்சிப்பாளையம் கிராம் மக்கள் வெள்ளநீரால் சூழப்பட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.