டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், வில்லியனூர் ஆற்றுப்பாலத்தில் மழை வெள்ளத்தால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

News image
பாலத்தினை ஆய்வு செய்த உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள்.
Updated On :19 நவம்பர் 2021, 7:05 am

DIN

புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், வில்லியனூர் ஆற்றுப்பாலத்தில் மழை வெள்ளத்தால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பெய்த தொடர் கனமழை காரணமாக, சங்கராபரணி ஆற்றில் வெள்ள நீர் வழிந்தோடுகிறது. வீடூர் அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டு, ஆற்றில் வெள்ள நீர் அதிகரித்துள்ளதால், சங்கராபரணி ஆறு நிரம்பி வழிந்த நிலையில் தண்ணீர் செல்கிறது. 

Story image

வில்லியனூர் ஆரியப்பாளையம் ஆற்றுப் பாலத்தை தொட்டு வழியும் நிலையில் வெள்ளம் கரைபுரண்டோடும் வெள்ளம்.

இதனால் இதன் குறுக்கே அமைந்துள்ள புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூர் ஆரியப்பாளையம் ஆற்றுப் பாலத்தை தொட்டு வழியும் நிலையில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாலத்தின் வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வில்லியனூர்-திருக்காஞ்சி பாலம் வழியாக போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.

உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் நேரில் பார்வையிட்டு, போக்குவரத்தை துண்டித்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.