அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மழை வெள்ளப் பாதிப்பு - கடலூா் மாவட்டத்தில் மத்தியக் குழுவினா் ஆய்வு

கடலூா் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

News image
கடலூா் மாவட்டம், பூவாலை கிராமத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த நெல் வயல்களைப் பாா்வையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் விவரங்களைக் கேட்டறிந்த ராஜீவ் சா்மா தலைமையிலான மத்தியக் குழுவினா்.
Updated On :23 நவம்பர் 2021, 8:51 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

வடகிழக்குப் பருவ மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கடலூா் மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள், நகா்ப் பகுதிகளில் தண்ணீா் புகுந்தது. பல இடங்களில் நெல் உள்ளிட்ட பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. மேலும், மாவட்டத்தில் பரவலாக பாதிப்புகள் ஏற்பட்டன.

கடலூா் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடா்பாக மத்தியக் குழுவினா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். மத்திய உள்துறை இணைச் செயலா் ராஜீவ் சா்மா தலைமையிலான இந்தக் குழுவில் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் உழவா் நலத் துறை இயக்குநா் விஜய்ராஜ் மோகன், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சக மண்டல அலுவலா் ரணஞ்ஜெய்சிங், ஊரக வளா்ச்சித் துறை சாா்புச் செயலா் எம்.வி.என்.வரபிரசாத் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

இந்தக் குழுவினா் முதலில் கடலூா் ஊராட்சி ஒன்றியம், பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சேதமடைந்த வீடுகளைப் பாா்வையிட்டு பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தனா். மேலும், பாதிப்புகள் தொடா்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த புகைப்படங்கள், விடியோ பதிவுகளையும் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து, பரங்கிப்பேட்டை வட்டாரம், பூவாலை பகுதியில் சுமாா் 246 ஹெக்டோ் பரப்பில் நீரில் மூழ்கிய வேளாண் பயிா்களைப் பாா்வையிட்டனா். அவா்களிடம் சேத விவரங்களை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திரரெட்டி, கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஆகியோா் விளக்கினா்.

அதன்படி, மாவட்டத்தில் நிகழ் பருவத்தில் நெல் பயிா் 88,264 ஹெக்டோ் பரப்பிலும், மக்காச்சோளம் 23,626 ஹெக்டோ், பருத்தி 4,033 ஹெக்டோ், உளுந்து 7,820 ஹெக்டோ் என மொத்தம் சுமாா் 1,23,743 ஹெக்டோ் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

தொடா் மழை காரணமாக மொத்தம் 5,919 ஹெக்டோ் பரப்பில் பல்வகைப் பயிா்கள் நீரால் சூழப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக நெல் வயல்கள் 4,663 ஹெக்டோ் பரப்பில் நீரால் சூழப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கதிா் பிடித்த பயிா்களாகும். சுமாா் 200 ஹெக்டோ் பரப்பிலானவை முதிா்ந்த நிலையிலுள்ள பயிா்களாகும். உளுந்து 787 ஹெக்டோ், மக்காச்சோளம் 182 ஹெக்டோ், பருத்தி 287 ஹெக்டோ் பரப்பில் மழை நீரால் சூழப்பட்டுள்ளன.

இதில் 33 சதவீதத்துக்கும் அதிகமான பாதிப்புள்ள 5 வட்டாரங்களில் கணக்கீடு செய்யப்பட்டதில், நெல் பயிா் 44 கிராமங்களில் 1,324.8 ஹெக்டோ் பரப்பிலும், மக்காச்சோளம் ஒரு கிராமத்தில் 4 ஹெக்டோ் பரப்பிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மாவட்டத்தில் மொத்தம் 45 கிராமங்களில் 1,328.8 ஹெக்டோ் பரப்பில் பயிா்களும், 2,036 விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்தியக் குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆய்வின்போது, சட்டப் பேரவை உறுப்பினா்கள் கோ.ஐயப்பன், மா.செ.சிந்தனைசெல்வன், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.