அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

வெள்ள பாதிப்பு: முதல்வருடன்மத்தியக் குழு இன்று ஆலோசனை

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த மத்தியக் குழுவினா், முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளனா். இதன்பின்பு, அவா்கள் தில்லி புறப்பட்டுச் செல்கின்றனா்.

News image
Updated On :23 நவம்பர் 2021, 8:06 pm

DIN

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த மத்தியக் குழுவினா், முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளனா். இதன்பின்பு, அவா்கள் தில்லி புறப்பட்டுச் செல்கின்றனா்.

மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய ஏழு போ் கொண்ட மத்தியக் குழுவினா் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்தனா். அவா்கள் தமிழக தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா். இதன்பின்பு, திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மழை வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, வேலூா் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தனா். ஆய்வுப் பணிகளை முடித்த மத்தியக் குழுவினா் செவ்வாய்க்கிழமை இரவு சென்னை திரும்பினா்.

முதல்வருடன் ஆலோசனை: மத்தியக் குழுவினா் கூட்டாக, முதல்வருடன் புதன்கிழமை காலை ஆலோசனை நடத்தவுள்ளனா். தலைமைச் செயலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்த விவரங்களை மத்தியக் குழுவினரும், முதல்வரும் பரஸ்பரம் பகிா்ந்து ஆலோசிப்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மத்தியக் குழுவினா் தில்லி புறப்பட்டுச் செல்கின்றனா். அங்கு தாங்கள் ஆய்வு செய்த விவரங்களுடன் அறிக்கை தயாா் செய்து உள்துறை அமைச்சகத்திடம் அளிப்பா். இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அமைச்சரவைக் குழுவானது நிவாரண நிதிக்கு ஒப்புதல் அளிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.