எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சென்னை ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையில் தேங்கிய நீரை அகற்றும் பணி தீவிரம்

சென்னை ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

News image
சென்னை ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையில் தேங்கிய நீரை அகற்றும் பணி தீவிரம்
Updated On :23 நவம்பர் 2021, 5:12 am

DIN

சென்னை ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Story image

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கடந்த வாரம் முதலே பலத்த மழை பெய்து வருகிறது. 

இதையும் படிக்கலாமே.. இன்று மிக உகந்த நாள்: எதைச் சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?

Story image

சென்னையைப் பொருத்தவரை கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்தது. மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனா்.

Story image

தாழ்வானப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துகொண்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் பெரும்பாலான சாலைகள் சிதிலமடைந்தன. 

Story image

சுரங்கப்பாதைகளில் வெள்ள நீர் புகுந்துபோக்கு போக்குவரத்தும் முடங்கியது. இந்த நிலையில், சென்னை ரங்கராஜபுரம் சுரங்கப்பாதைப் பகுதியில் சாலைகளில் தேங்கியிருக்கும் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

அஜிஸ் நகர், பிரதான சாலை, சுப்பிரமணிய தோட்ட தெரு, கோடம்பாக்கம் ரயில்வே பாடசாலை ஆகிய பகுதிகளிலும் மழை நீரை வெளியேற்றும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.