திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

தக்காளி விலை கிலோ ரூ.125: அமைச்சர் அளித்த விளக்கம்

ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால் வரத்து குறைந்துள்ளதே தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:31 am

DIN

ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால் வரத்து குறைந்துள்ளதே தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், தக்காளி விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் தொடா்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு, வரத்து பாதியாக குறைந்ததால் அதன் விலை திடீரென அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், ஆந்திரத்தில் தொடர் மழை பெய்து வருவதால் வரத்து குறைந்து தக்காளி விலை அதிகரித்துள்ளது. விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உழவர் சந்தை திட்டப் பணிகளை மேக்படுத்த விரைந்து நவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

மொத்த விற்பனை கடைகளில் தக்காளி ஒரு பெட்டி (14 கிலோ) ரூ.1200-க்கும் மகாராஷ்டிரா தக்காளி ஒரு பெட்டி (25 கிலோ) ரூ.2200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை விற்பனைக் கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.120 வரை விற்கப்படுகிறது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி ரூ.120 முதல் 130-க்கு விற்கப்படுகிறது.

மாவட்டவாரியாக தக்காளி விலை (1 கிலோ):

திருப்பத்தூா், ஆம்பூா், கோவை, திருவாரூா், உதகை, சங்ககிரி, கிருஷ்ணகிரி ரூ.120

சேலம் ரூ.100-ரூ.120

ஒட்டன்சத்திரம் ரூ.115

ஈரோடு ரூ.110

மயிலாடுதுறை 1 கிலோ - ரூ. 100

வேலூா், மதுரை , ராணிப்பேட்டை ரூ.70 முதல் ரூ.100 வரை

திருவள்ளூா், நாகப்பட்டினம், விருதுநகா், நாமக்கல் ரூ. 90

சிவகங்கை, தருமபுரி, ஒசூா் ரூ. 80.

காஞ்சிபுரம் ரூ.80-ரூ.100

தேனி, திண்டுக்கல் ரூ. 70

பெங்களூரு ரூ.120.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.