தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

நாளை(நவ.25) 11-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம்; 50,000 மையங்கள் ஏற்பாடு

தமிழகத்தில் 11-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நாளை(நவ.25) நடைபெற உள்ளது. இதில், இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

News image
Updated On :24 நவம்பர் 2021, 10:16 am

DIN

தமிழகத்தில் 11-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நாளை(நவ.25) நடைபெற உள்ளது. இதில், இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அந்தவகையில் தமிழக அரசு தற்போது வாரத்திற்கு இருமுறை மெகா தடுப்பூசி முகாம் நடத்துகிறது. இதில் தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள முகாம்களிலேயே தடுப்பூசி செலுத்த மக்களுக்கு வசதியாக உள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் 11-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நாளை(நவ.25) நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 50,000 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படுகின்றன. சென்னையில் 1,600 தடுப்பூசி முகாம்கள் செயல்படும். 

மெகா தடுப்பூசி முகாம்களுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் 2-வது டோஸை செலுத்தாதவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.