ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காஞ்சிபுரம் அருகே வயதான தம்பதியரையும் 5 ஆடுகளையும் மீட்ட தீயணைப்புத்துறை

காஞ்சிபுரம் அருகே ஆர்ப்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த தலையில்லா பெரும்பாக்கம் கிராமத்தில் வெள்ளம் காரணமாக வீட்டில் சிக்கிக் கொண்ட வயதான தம்பதியரையும் அவர்களது 5 ஆடுகளையும் தீயணைப்புத்துறையினர் மீட்டனர் .

News image
ஆடுகளுடன் வயதான தம்பதியரையும் மீட்டு படகில் அழைத்து வரும் காஞ்சிபுரம் தீயணைப்புத்துறையினர்
Updated On :27 நவம்பர் 2021, 11:49 am

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஆர்ப்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த தலையில்லா பெரும்பாக்கம் கிராமத்தில் வெள்ளப் பெருக்கு காரணமாக வீட்டில் சிக்கிக் கொண்ட வயதான தம்பதியரையும் அவர்களது 5 ஆடுகளையும் சனிக்கிழமை தீயணைப்புத்துறையினர் படகில் சென்று மீட்டனர்.

காஞ்சிபுரம் அருகே ஆர்ப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது தலையில்லா பெரும்பாக்கம் கிராமம். பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இக்கிராமத்தைச் சேர்ந்த பலராமன்(50) மற்றும் அவரது 50 வயதுடைய மனைவி இருவரும் அவர்களது வீட்டில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

அவர்களது வளர்ப்பு ஆடுகளை விட்டுவிட்டு அவர்கள் மட்டும் வீட்டிலிருந்து வெளியே வர விரும்பாமல் அங்கேயே இருந்துள்ளனர். இத்தகவலை அருகிலிருந்தவர்கள் காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தெரிவித்தனர்.

இதனையடுத்து காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு படகில் சென்று வயதான தம்பதியரையும் அவர்களது 5 வளர்ப்பு ஆடுகளையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். தம்பதியரும் தீயணைப்புத்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.