தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வாழப்பாடியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் பேரணி

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது.

News image
வாழப்பாடியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணி
Updated On :28 நவம்பர் 2021, 8:21 am

DIN


வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடியில் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியதைக் கண்டித்து, சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், ஞாயிற்றுக்கிழமை கண்டன பேரணி மற்றும் மக்கள் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

இப்பேரணிக்கு, சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே. அர்த்தனாரி தலைமை வகித்தார். வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜாராம் வரவேற்றார். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகனான, காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் இராம சுகந்தன் பேரணியை தொடக்கி வைத்தார்.

இந்தப் பேரணியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜா, முனுசாமி, சதீஷ்குமார், செந்நிலவன், கோவிந்தராஜ், பிரபாகரன்,  முரளிதரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இப்பேரணியில், விலைவாசி உயர்வை மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்ததோடு, மத்திய அரசின் நிலைப்பாட்டை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென கோஷமிட்டு விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். நிறைவாக, ஆனந்தன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.