பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

கனமழையால் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் நிரம்பிய உப்பாறு அணை!

தற்போது  திருமூர்த்தி அணை மற்றும் உப்பாறு அணைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் உப்பாறு அணை நிரம்பியுள்ளது. 

News image

உப்பாறு அணையின் பாதுகாப்பு கருதி திறந்துவிடப்பட்டுள்ள உபரிநீர்.

Updated On :28 நவம்பர் 2021, 2:08 pm IST


திருப்பூர்: தற்போது  திருமூர்த்தி அணை மற்றும் உப்பாறு அணைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் உப்பாறு அணை நிரம்பியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட உப்பாறு அணை. இந்த அணையின் முழு கொள்ளளவு 24 அடியாகும். இந்த உப்பாறு அணை கடந்த 20 ஆண்டுகளாக தண்ணீர் இன்றி காய்ந்து கிடந்த நிலையில் விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் காரணமாக வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும். 

தற்போது பருவமழை தீவிரமடைந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீரின்றி காய்ந்து கிடந்த உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணை மற்றும் உப்பாறு அணைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக உப்பாறு ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ள நீர் மற்றும் திருமூர்த்தி அணையின் உபரி நீர் உப்பாறு அணையை வந்தடைந்தது. இதையடுத்து கடந்த 20 ஆண்டுளுக்கு பின் உப்பாறு சனிக்கிழமை இரவு முழு கொள்ளளவை எட்டியது. 

Story image

உப்பாறு அணையை ஆர்வமுடன் பார்வையிடும் குண்டடம், தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள்.

இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் சனிக்கிழமை இரவு10:30 மணி அளவில் திறந்து விடப்பட்டது. 

இதன் காரணமாக உப்பாறு அணையின் கரையோரப் பகுதிகளான ஆலாம்பாளையம் தொப்பம்பட்டி சின்னிய கவுண்டம்பாளையம் நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உப்பாறு அணை நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் நிரம்பிய உப்பாறு அணை குண்டடம், தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்வமுடன் பார்வையிட்டு சென்றனர். 

அதேபோல உப்பாறு அணையைச் சுற்றியுள்ள விவசாயிகளும் அணை நிரம்பியதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.