டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 95.20 ஆக நிறைவு!பங்குச் சந்தை சரிவு: சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கும், நிஃப்டி 24,550க்கு அருகில் சென்று நிறைவு!!பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே! செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 5,400 உயர்வு: தங்கம் விலை மாலை நிலவரம்! முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சு
/

வாழப்பாடியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் பேரணி

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது.

News image

வாழப்பாடியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணி

Updated On :28 ஜனவரி 2024, 11:04 am IST


வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடியில் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியதைக் கண்டித்து, சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், ஞாயிற்றுக்கிழமை கண்டன பேரணி மற்றும் மக்கள் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

இப்பேரணிக்கு, சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே. அர்த்தனாரி தலைமை வகித்தார். வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜாராம் வரவேற்றார். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகனான, காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் இராம சுகந்தன் பேரணியை தொடக்கி வைத்தார்.

இந்தப் பேரணியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜா, முனுசாமி, சதீஷ்குமார், செந்நிலவன், கோவிந்தராஜ், பிரபாகரன்,  முரளிதரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இப்பேரணியில், விலைவாசி உயர்வை மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்ததோடு, மத்திய அரசின் நிலைப்பாட்டை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென கோஷமிட்டு விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். நிறைவாக, ஆனந்தன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.