தமிழகத்தில் இன்றுமுதல் அரசு குளிர்சாதனப் பேருந்துகள் மீண்டும் இயங்கத் தொடங்கியது.
கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக இந்தாண்டு மே 10ஆம் தேதி முதல் குளிர்சாதனப் பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டன. தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளதையடுத்து மீண்டும் சேவையை தொடங்கப்பட்டுள்ளது.
முன்னரே அறிவித்ததுபடி, மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே இயக்கப்பட்ட தமிழக அரசின் 702 குளிர்சாதனப் பேருந்துகள் இன்றுமுதல் மீண்டும் இயக்கப்பப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.