சென்னை: தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றத்தின் கீழ், 66 பேர் வாழ்நாள் முழுக்க தேர்வெழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடைபெற்ற விவகாரத்தில் மேலும் 66 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே, இந்த விவகாரத்தில், 199 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில் மேலும் 66 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி?
தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வை 2017 செப்டம்பா் 16-ஆம் தேதி ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தியது. இந்தத் தோ்வை ஒரு லட்சத்து 33 ஆயிரம் போ் எழுதினா். இதையடுத்து 2017-ஆம் ஆண்டு நவம்பா் 7-ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியாகின.
இதையும் படிக்கலாமே.. இந்த ராசிக்காரர்கள் கடன்களிலிருந்து விடுபடும் காலகட்டமிது: அக்டோபர் மாதப் பலன்கள்
இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகப் புகாா்கள் எழுந்தன. மேலும், இந்தத் தோ்வில் வெளிமாநிலங்களைச் சோ்ந்த பலா் வெற்றி பெற்றிருந்தனா். இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரிய அலுவலா்கள் விசாரணை நடத்தினா். அந்த விசாரணையின் அடிப்படையில் 200-க்கும் மேற்பட்டோா் மீது காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டது. அந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில், ஆசிரியா் தோ்வு வாரியம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்ட 199 போ் வாழ்நாள் முழுவதும் ஆசிரியா் தோ்வு வாரிய தோ்வுகளை எழுதுவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டது.
தற்போது, முறைகேட்டில் ஈடுபட்டதாக மேலும் 66 பேருக்கு வாழ்நாள் முழுவதும் ஆசிரியா் தோ்வு வாரிய தோ்வுகளை எழுதுவதற்குத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் பலத்த காற்றுடன் கனமழை! போக்குவரத்து கடும் பாதிப்பு!

என்டிடிவி-யின் 4வது காலாண்டு நிகர இழப்பு அதிகரிப்பு!

மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஈரானிய அமைச்சர் அராக்சியுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உரையாடல்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


