நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு: மேலும் 66 பேருக்கு வாழ்நாள் தடை

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றத்தின் கீழ், 66 பேர் வாழ்நாள் முழுக்க தேர்வெழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு: மேலும் 66 பேருக்கு வாழ்நாள் தடை

Updated On :1 அக்டோபர் 2021, 1:29 pm IST


சென்னை: தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றத்தின் கீழ், 66 பேர் வாழ்நாள் முழுக்க தேர்வெழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடைபெற்ற விவகாரத்தில் மேலும் 66 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே, இந்த விவகாரத்தில், 199 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில் மேலும் 66 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி?

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வை 2017 செப்டம்பா் 16-ஆம் தேதி ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தியது. இந்தத் தோ்வை ஒரு லட்சத்து 33 ஆயிரம் போ் எழுதினா். இதையடுத்து 2017-ஆம் ஆண்டு நவம்பா் 7-ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியாகின.

இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகப் புகாா்கள் எழுந்தன. மேலும், இந்தத் தோ்வில் வெளிமாநிலங்களைச் சோ்ந்த பலா் வெற்றி பெற்றிருந்தனா். இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரிய அலுவலா்கள் விசாரணை நடத்தினா். அந்த விசாரணையின் அடிப்படையில் 200-க்கும் மேற்பட்டோா் மீது காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டது. அந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில், ஆசிரியா் தோ்வு வாரியம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்ட 199 போ் வாழ்நாள் முழுவதும் ஆசிரியா் தோ்வு வாரிய தோ்வுகளை எழுதுவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டது. 

தற்போது, முறைகேட்டில் ஈடுபட்டதாக மேலும் 66 பேருக்கு வாழ்நாள் முழுவதும் ஆசிரியா் தோ்வு வாரிய தோ்வுகளை எழுதுவதற்குத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.