வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது

காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி, ஆலந்தூா் மெட்ரோ நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பசுமை இந்தியா இயக்கம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பயணிகள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :2 அக்டோபர் 2021, 8:48 pm

DIN

காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி, ஆலந்தூா் மெட்ரோ நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பசுமை இந்தியா இயக்கம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பயணிகள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

காந்திஜெயந்தி தினத்தையொட்டி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவா்கள் இணைந்து, பசுமை இந்தியா இயக்கம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தினா். ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பயணிகள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், விதைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஒருபகுதியாக, மகாத்மா காந்தி மற்றும் இந்திய சுதந்திரம் பற்றிய கவிதை ஒப்பித்தல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில், மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளா்களின் குழந்தைகள் கலந்து கொண்டனா். போட்டியில், வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.