இங்கெல்லாம் அடுத்த ஓரிரு மணி நேரத்துக்குள் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் வேலூர், ரணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்துக்குள் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 5 நாள்களுக்கு மிக கனமழை தொடரும்
தமிழகத்தில் 5 நாள்களுக்கு மிக கனமழை தொடரும்

சென்னை: தமிழகத்தில் வேலூர், ரணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்துக்குள் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் இது குறித்த எச்சரிக்கைத் தகவலை தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது சுட்டுரைப் பக்கத்தில்  வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது, அக்டோபர் 4ஆம் தேதி  வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கைச் செய்தி திங்கள்கிழமை பிற்பகல் 3.45 மணிக்கு விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com