தமிழகத்தில் பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகள் வகுக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் அமைச்சர் பொன்முடியை வரவேற்க பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் பலியானார். அந்த சிறுவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், பேனர்கள் வைப்பதை தடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியும் மோகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில் தமிழக அரசு இன்று அளித்த பதிலில், பேனர் வைக்க ஒப்பந்தம் பெற்றிருந்த ஒப்பந்ததாரர்தான் சிறுவனை பணியில் அமர்த்தியுள்ளார். அவரை கைது செய்துள்ளோம். மேலும், சிறுவனின் குடும்பத்திற்கு முதற்கட்டமாக ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றனர்.
இதையடுத்து நீதிபதிகளின் உத்தரவில்,
தமிழகத்தில் பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகள் வகுக்கப்பட வேண்டும். பேனர்கள் தொடர்பாக தமிழக அரசு மற்றும் திமுகவினர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு!

மஹிந்திரா & மஹிந்திரா 4வது காலாண்டு லாபம் 48.5% உயர்வு!

திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி காலமானார்

அதிக, குறைந்தபட்ச வாக்கு வித்தியாசங்களில் வென்ற தவெகவினர்!
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


