புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகள் வகுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகள் வகுக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

News image

சென்னை உயர்நீதிமன்றம்

Updated On :5 அக்டோபர் 2021, 6:12 am

DIN

தமிழகத்தில் பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகள் வகுக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் அமைச்சர் பொன்முடியை வரவேற்க பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் பலியானார். அந்த சிறுவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், பேனர்கள் வைப்பதை தடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியும் மோகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணையில் தமிழக அரசு இன்று அளித்த பதிலில், பேனர் வைக்க ஒப்பந்தம் பெற்றிருந்த ஒப்பந்ததாரர்தான் சிறுவனை பணியில் அமர்த்தியுள்ளார். அவரை கைது செய்துள்ளோம். மேலும், சிறுவனின் குடும்பத்திற்கு முதற்கட்டமாக ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றனர்.

இதையடுத்து நீதிபதிகளின் உத்தரவில்,

தமிழகத்தில் பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகள் வகுக்கப்பட வேண்டும். பேனர்கள் தொடர்பாக தமிழக அரசு மற்றும் திமுகவினர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.