புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருப்புவனத்தில் போலீசார் விரட்டியதால் தாங்களாகவே வைகை ஆற்றுக்குள் தர்ப்பணம் செய்த மக்கள்!

மகாளய அமாவாசையை முன்னிட்டு காசிக்கு நிகராக கருதப்படும் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில் புதன்கிழமை காலை தர்ப்பணம் செய்ய வந்த மக்களை போலீசார் விரட்டியதால் அவர்கள் ஆற்றுக்குள் சென்று தாங்களா

News image

மகாளய அமாவாசையை முன்னிட்டு தர்ப்பண பூஜை செய்ய திருப்புவனம் வைகை ஆற்றங்கரை ஓரம் கூடிய மக்களை போலீசார் விரட்டினர்.

Updated On :6 அக்டோபர் 2021, 4:08 am

DIN

மானாமதுரை: மகாளய அமாவாசையை முன்னிட்டு காசிக்கு நிகராக கருதப்படும் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில் புதன்கிழமை காலை தர்ப்பணம் செய்ய வந்த மக்களை போலீசார் விரட்டியதால் அவர்கள் ஆற்றுக்குள் சென்று தாங்களாகவே தர்ப்பண பூஜை செய்து வீடு திரும்பினர். 

திருப்புவனத்தில் இறந்தவர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இங்கு மேற்கண்ட காரியங்களை செய்தால் காசியில் செய்ததற்கு இணையானது என நம்பப்படுகிறது. இதனால் தினமும் தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் திருப்புவனம் வைகையாற்றில் கூடுவார்கள். 

இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகளால் மகாளய அமாவாசையை முன்னிட்டு திருப்புவனம் வைகை ஆற்றில் திதி, தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால் மேற்கண்ட  இடத்துக்கு வரும் வழியில் போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். தடுப்புகளை மீறி இந்த இடத்துக்கு வந்தவர்களை போலீசார் விரட்டினர். இதனால் தர்ப்பணம், திதி கொடுக்க வந்த மக்கள் வைகை ஆற்றுக்குள் இறங்கி அவர்களாகவே எள்ளும் தண்ணீரும் இரைத்து தர்ப்பணம் செய்து கொண்டனர். 

வழக்கமாக திருப்புவனம் வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதியில் கிரிகை,திதி செய்வதற்கான வேத விற்பன்னர்கள் யாரும் அங்கு காணப்படவில்லை. மானாமதுரை பகுதியில் மக்கள் அவர்களாகவே வைகையாறு உள்ளிட்ட கோயில்களுக்குச் சென்று எள்ளும் தண்ணீரும் இரைத்து தர்ப்பணம் செய்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.