திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

முதல்வருடன் டாடா குழுமத் தலைவர் சந்திப்பு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, டாடா குழுமத் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். 

News image
முதல்வருடன் டாடா குழுமத் தலைவர் சந்திப்பு
Updated On :6 அக்டோபர் 2021, 12:07 pm

DIN

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, டாடா குழுமத் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். 

இந்த சந்திப்பின்போது, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

சென்னையில் இயங்கி வந்த கார் உற்பத்தி தொழிற்சாலையான ஃபோர்டு நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால், மூடப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

தற்போது ஃபோர்டு நிறுவனத்தை டாடா குழுமம் வாங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், டாடா குழுமத் தலைவர் முதல்வரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.