மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மானாமதுரை கண்மாயில் ஆலைக் கழிவுநீர் கலப்பு: செத்து மிதக்கும் மீன்கள் 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை உடைகுளம் கண்மாயில் அருகே உள்ள ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலப்பதால் கண்மாயில் வளர்ந்து வந்த மீன்கள் செத்து மிதக்கின்றன. 

News image
மானாமதுரையில் உடைகுளம் கண்மாயில் ஆலைக் கழிவு நீர் கலப்பதால் மீன்கள் செத்து மிதக்கின்றன.
Updated On :7 அக்டோபர் 2021, 7:17 am

DIN


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை உடைகுளம் கண்மாயில் அருகே உள்ள ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலப்பதால் கண்மாயில் வளர்ந்து வந்த மீன்கள் செத்து மிதக்கின்றன. 

மானாமதுரை பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் கனமழை கொட்டுகிறது. இதனால் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்  உள்ள கண்மாய், ஊரணி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

மானாமதுரை உடைகுளம் பகுதியில் தயாபரம் மாரியம்மன் கோயில் எதிரே வறண்டு கிடந்த பாசனக் கண்மாய்க்கு பல பகுதிகளிலிருந்தும் மழைத் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கண்மாய் நிரம்பி வருகிறது. இந்த கண்மாய்க்கு அருகேயுள்ள மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் இயங்கும் சில தனியார் ஆலைகளிலிருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுநீர் உடைகுளம் கண்மாய் மழைத்தண்ணீர் செல்லும் கால்வாயில் கலப்பதால் மழைநீரும் ஆலைக் கழிவு நீரும் சேர்ந்து உடைகுளம் கண்மாய்க்கு சென்று சேருகின்றன. இதனால் கண்மாய்களில் வளரும் மீன்கள் ரசாயன பாதிப்பு காரணமாக செத்து மிதக்கின்றன. 

இந்த மீன்கள் சிப்காட் பகுதியில் இருந்து உடைகுளம் கண்மாய்க்குச் செல்லும் நீர் வழிப்பாதையில் செத்து கிடக்கின்றன. 

சிப்காட் பகுதியில் உள்ள ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் உடைகுளம் கண்மாய்க்கு போய்ச் சேருவதால் அங்கு வளரும் மீன்கள் செத்து விடுவதாக இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.