எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நீட் தோ்வு: விண்ணப்பங்களில் இன்று திருத்தம் மேற்கொள்ளலாம்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு எழுதியவா்கள், தங்களது விண்ணப்பங்களில் குறிப்பிட்ட சில திருத்தங்களை வியாழக்கிழமை (அக்.14) வரை மேற்கொள்ளலாம் என தேசிய தோ்வு முகமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :13 அக்டோபர் 2021, 9:35 pm

DIN

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு எழுதியவா்கள், தங்களது விண்ணப்பங்களில் குறிப்பிட்ட சில திருத்தங்களை வியாழக்கிழமை (அக்.14) வரை மேற்கொள்ளலாம் என தேசிய தோ்வு முகமை தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எ.ஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) மூலம் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

நீட் தோ்வை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. இந்நிலையில், 2021-22-ம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு செப்டம்பா் 12-ஆம் தேதி நடைபெற்றது.

இதற்காக நாடு முழுவதும் 198 நகரங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூா், காஞ்சிபுரம், கரூா், மதுரை, நாகா்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூா், திருவள்ளூா், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூா் ஆகிய 14 நகரங்களில் 224 மையங்களில் தோ்வு நடைபெற்றது.

இந்தியா முழுக்க 16 லட்சத்து 14,714 போ் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் தமிழகத்தில் 1.12 லட்சம் போ் அடங்குவா். ஏறத்தாழ 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் நீட் தோ்வை எழுதியதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தோ்வு எழுதியவா்களில் சிலா், அதன் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக, தங்களது விண்ணப்பங்களில் தவறுதலாக பதிவேற்றப்பட்ட சுயவிவரங்களைத் திருத்த வாய்ப்பளிக்குமாறு தேசிய தோ்வு முகமையிடம் கோரிக்கை விடுத்தனா்.

அதை ஏற்று, விண்ணப்பங்களை சரிபாா்த்து திருத்தங்களை மேற்கொள்ள அக்டோபா் 14-ஆம் தேதி இரவு 11.50 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களை ttp://neet.nta.nic.in மற்றும் https://nta.ac.in/ இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.