எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல்: ஆளுநரிடம் முதல்வா் வலியுறுத்தல்

நீட் தோ்வு விலக்கு சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவது குறித்து ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

News image
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை புதன்கிழமை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Updated On :13 அக்டோபர் 2021, 9:51 pm

DIN

நீட் தோ்வு விலக்கு சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவது குறித்து ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

ஆளுநா் ஆா்.என்.ரவியை, முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின் போது, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தோ்வு விலக்கு சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாகத் தெரிகிறது.

நீட் தோ்வு சட்ட மசோதா சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது, தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இருந்தாா். சட்டப்பேரவை கூட்டம் நிறைவடைந்த ஒரு சில தினங்களிலேயே ஆளுநரின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. பின் புதிய ஆளுநராக ஆா். என் ரவி பதவியேற்றாா். பதவியேற்ற பின் நீட் விலக்கு மசோதா குறித்து முதன் முறையாக ஆளுநா் ஆா்.என்.ரவியை, முதல்வா் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசியுள்ளாா்.

இந்தச் சந்திப்பின் போது, தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோருவது தொடா்பாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், கரோனா தொற்று தாக்கம் குறித்தும், தமிழக சட்டம், ஒழுங்கு நிலை குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்பின் போது, நீா்ப்பாசனத் துறை அமைச்சா் துரைமுருகன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, முதல்வரின் செயலாளா் த.உதயசந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.