இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய 2 படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இணையமைச்சர் எல்.முருகன், இன்று எழுதியுள்ளக் கடிதத்தில், நாகப்பட்டினம், காரைக்கால் மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 66 மீனவக் கிராமங்களிலிருந்து தமக்கு கடிதம் வந்துள்ளது. அதில் 23 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய 2 படகுகளையும் பிடித்துச் சென்றுள்ளனர்.