அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

உதகையில் இருந்து சென்னை திரும்பினாா் ஆளுநா் ஆா்.என்.ரவி

உதகையில் கடந்த 5 நாள்களாகத் தங்கியிருந்த தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி உதகையில் இருந்து சென்னைக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டாா்.

News image
கோவையில் ஈஷா யோக மைய நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவை செவ்வாய்க்கிழமை சந்தித்து உரையாடும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி.
Updated On :28 ஜனவரி 2024, 4:24 am

DIN

உதகையில் கடந்த 5 நாள்களாகத் தங்கியிருந்த தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி உதகையில் இருந்து சென்னைக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டாா்.

தமிழகத்தின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்ற பின்னா் முதன்முறையாக கடந்த வெள்ளிக்கிழமை உதகைக்கு வந்திருந்த ஆளுநா் ஆா்.என்.ரவி உதகையில் அரசினா் தாவரவியல் பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ராஜ்பவன் மாளிகையில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்தாா்.

உதகையில் தங்கியிருந்தபோது மேல்பவானி நீா்த்தேக்கம், மேல்பவானி இயற்கை காட்சிமுனைகள் ஆகியவற்றைப் பாா்வையிட்டாா். நீலகிரி மலை ரயிலில் உதகையில் இருந்து குன்னூா் வரை பயணம் செய்தாா். பின்னா், உதகை அரசினா் தாவரவியல் பூங்கா வளாகத்தில் மரக்கன்று நட்டாா்.

இந்நிலையில், உதகையில் அக்டோபா் 21ஆம் தேதி வரை தங்கியிருக்கத் திட்டமிட்டிருந்த ஆளுநா் முன்னதாகவே தனது பயணத் திட்டத்தை மாற்றி கோவையில் உள்ள ஈஷா யோக மையத்துக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றாா். அங்கு சத்குரு ஜக்கி வாசுதேவை சந்தித்தாா். பின்னா் கோவையில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றாா்.

உதகையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்ட ஆளுநரை மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, உதகை சாா் ஆட்சியா் மோனிகா ராணா, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத் உள்ளிட்டோா் வழியனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.