மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

மின்சார வாரியத்தின் மீதான புகாருக்கு மன்னிப்பு கேட்க முடியாது: அண்ணாமலை பேட்டி

மின்சார வாரியத்தின் மீதான புகாருக்கு மன்னிப்பு கேட்க முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். 

News image

திருப்பூர் வித்தியாலயம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பாஜக மாவட்ட அலுவலகத்தை ஆய்வு செய்த தேசிய செயலாளர் அருண் சிங், மாநில தலைவர் அண்ணாமலை, சி.பி. ராதாகிருஷ்ணன், பொன்னார், சுதாகர் ரெட்டி.

Updated On :22 அக்டோபர் 2021, 1:12 pm IST


திருப்பூர்: மின்சார வாரியத்தின் மீதான புகாருக்கு மன்னிப்பு கேட்க முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். 

திருப்பூர் வித்தியாலயம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பாஜக மாவட்ட அலுவலகத்தை தேசிய செயலாளர் அருண் சிங், மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய செயற்குழு உறுப்பினர்கள் சி.பி. ராதாகிருஷ்ணன், பொன் ராதாகிருஷ்ணன், தமிழக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். 

இதன் பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழகம் முழுவதும் பாஜக கட்சியை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் கட்சிக்கு சொந்தமாக அலுவலங்கள் கட்டப்பட்டு வருகிறது. 

திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்ட அலுவலகத்தை வருகின்ற நவம்பர் 10 ஆம் தேதி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திறந்து வைக்க உள்ளார். மேலும் திருப்பூரில் இருந்தவாறு ஈரோடு ,திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டப்பட்ட கட்சி அலுவலகங்களையும் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைக்கிறார்.

இதையும் படிக்க | டீசல் விலை ரூ.100-ஐ நெருங்கியது

மேலும் மின்சார வாரியம் தொடர்பான புகாருக்கு மன்னிப்பு கேட்கக் கோரிய அமைச்சர் செந்தில்பாலாஜியின் விவகாரத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது. அதேவேளையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் சந்தித்துக் கொள்கிறேன் என்று அண்ணாமலை தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.