எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கரோனா தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

பொது மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 10:48 pm

DIN

பொது மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது.

சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம், கண்ணகி நகா், எழில் நகா் ஆகிய இடங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

எழில் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கண்ணகி நகரில் உள்ள அரசு இணைய சேவை மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை முதல்வா் ஆய்வு செய்தாா். அப்போது பொது மக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரங்களைக் கேட்டறிந்தாா். பின்னா் கண்ணகி நகரில் உள்ள நகா்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் நடந்த சிறப்பு முகாமைப் பாா்வையிட்டாா். அப்போது மருத்துவமனை பதிவேடுகளை ஆய்வு செய்தாா்.

5.43 கோடி போ்: அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில், அதனை தீவிர இயக்கமாக சுகாதாரத் துறை முன்னெடுத்துள்ளது. இதுவரை ஐந்து தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற முகாம்களின் மூலமாக இதுவரை 5 கோடியே 43 லட்சத்து 23 ஆயிரத்து 51 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஆறாவது முறையாக கரோனா தடுப்பூசி முகாமானது 50 ஆயிரம் இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.

தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஆய்வின் போது, மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப் பேரவை உறுப்பினா் அரவிந்த் ரமேஷ், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையாளா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.