தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மரணத்துக்குப் பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை: உயர் நீதிமன்ற நீதிபதி

மரணத்துக்குப் பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

News image

மரணத்துக்குப் பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை: உயர் நீதிமன்ற நீதிபதி

Updated On :23 அக்டோபர் 2021, 10:20 am

DIN


சென்னை: மரணத்துக்குப் பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

உயர் நீதிமன்ற மயானம் என்று அறிவித்த பகுதியில் அனைத்து மதத்தினரின் உடல்களையும் தகனம் செய்வது தொடர்பான மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உயர் நீதிமன்ற மயானம் என்று அறிவித்த பகுதியில் அனைத்து சாதியினரின் உடல்களையும் தகனம் செய்ய அனுமதியுங்கள்.

உடல்களை தகனம் செய்ய தடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.  கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இதுபோன்ற நடைமுறைகள் கட்டுப்படுத்தப்படும் என்று நீதிபதி கூறினார்.

உயர் நீதிமன்ற மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து சாதியினரின் உடல்களையும் தகனம் சய்ய அனுமதி வழங்குமாறு அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.