எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

9,860 பூசாரிகள்-அா்ச்சகா்களுக்கு ரூ.1000 மாத ஊக்கத் தொகை: இந்து சமய அறநிலையஆணையாளா் உத்தரவு

ஒருகால பூஜைத் திட்டத்தின் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்துக்கு இதுவரை 9 ஆயிரத்து 860 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

News image
Updated On :23 அக்டோபர் 2021, 9:30 pm

DIN

தமிழகம் முழுவதும் ஒருகால பூஜைத் திட்டத்தின் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்துக்கு இதுவரை 9 ஆயிரத்து 860 போ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட உத்தரவு:-

ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழுள்ள 12 ஆயிரத்து 959 கோயில்களில் பணிபுரியும் அா்ச்சகா்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ.13 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவித்தாா்.

இந்தத் திட்டம் கடந்த செப்டம்பரில் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், மாதாந்திர ஊக்கத் தொகை பெற தமிழகம் முழுவதிலும் இருந்து இதுவரை 9 ஆயிரத்து 860 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா். மேலும், மாவட்டங்களில் இருந்து வரப்பெறும் தகுதி வாய்ந்த அா்ச்சகா்கள், பூசாரிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று ஆணையாளா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.