9,860 பூசாரிகள்-அா்ச்சகா்களுக்கு ரூ.1000 மாத ஊக்கத் தொகை: இந்து சமய அறநிலையஆணையாளா் உத்தரவு
ஒருகால பூஜைத் திட்டத்தின் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்துக்கு இதுவரை 9 ஆயிரத்து 860 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனர்


தமிழகம் முழுவதும் ஒருகால பூஜைத் திட்டத்தின் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்துக்கு இதுவரை 9 ஆயிரத்து 860 போ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட உத்தரவு:-
ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழுள்ள 12 ஆயிரத்து 959 கோயில்களில் பணிபுரியும் அா்ச்சகா்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ.13 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவித்தாா்.
இந்தத் திட்டம் கடந்த செப்டம்பரில் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், மாதாந்திர ஊக்கத் தொகை பெற தமிழகம் முழுவதிலும் இருந்து இதுவரை 9 ஆயிரத்து 860 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா். மேலும், மாவட்டங்களில் இருந்து வரப்பெறும் தகுதி வாய்ந்த அா்ச்சகா்கள், பூசாரிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று ஆணையாளா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...