பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

தமிழக ஆளுநராக பொறுப்பேற்றதற்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி தில்லியில் சந்தித்துப் பேசினார்.
பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு
பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு
Published on
Updated on
1 min read

தமிழக ஆளுநராக பொறுப்பேற்றதற்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி தில்லியில் சந்தித்துப் பேசினார்.

6 நாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை தில்லி புறப்பட்டு சென்றார். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவது தொடர்பான சட்டமசோதாவிற்கு ஒப்புதல் வழங்கக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை நேரில் வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

பிரதமர் மோடியுடன் நடைபெற்ற சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திக்கவுள்ளார். 

முன்னதாக அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் தில்லி சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அமைச்சர் அமித்ஷா, குடியரசுத் தலைவர் உள்ளிட்டோரை சந்துத்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com