மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தமிழகத்தில் மழலையர், நர்சரி பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு

தமிழகத்தில் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :23 அக்டோபர் 2021, 4:50 am

DIN

தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில், மெல்ல மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. கல்லூரிகள், 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் ஆகியவை திறக்கப்பட்டுள்ள நிலையில், மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் நவம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த கடந்த 14-ம் தேதி கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதில், நவம்பர் 1 முதல் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் (எல்கேஜி, யூகேஜி), அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம். காப்பாளர், சமையலர் உள்பட அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அறிவித்தது.

இந்நிலையில், மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் நவம்பர் 1ஆம் தேதி திறக்கப்படாது என அரசு அறிவத்துள்ளது. பள்ளிகளை தற்போதைக்கு திறக்கும் முடிவு இல்லை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மழலையர், எல்கேஜி, யூகேஜி பள்ளிகள் திறப்பு குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.