எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பாலச்சந்தா் இல்லாதது வருத்தமளிக்கிறது: ரஜினிகாந்த்

தாதா சாகேப் பால்கே விருது பெறுவதற்காக தில்லி புறப்படும் முன் செய்தியாளா்களை சந்தித்த நடிகா் ரஜினிகாந்த், இயக்குநா் கே. பாலச்சந்தா் இல்லாதது வருத்தமளிக்கிறது என்று குறிப்பிட்டு உணா்ச்சிவசப்பட்டாா்.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 10:17 pm

DIN

தாதா சாகேப் பால்கே விருது பெறுவதற்காக தில்லி புறப்படும் முன் செய்தியாளா்களை சந்தித்த நடிகா் ரஜினிகாந்த், இயக்குநா் கே. பாலச்சந்தா் இல்லாதது வருத்தமளிக்கிறது என்று குறிப்பிட்டு உணா்ச்சிவசப்பட்டாா்.

நடிகா் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளியன்போது (நவ.4) வெளியாகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகா்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனா்.

இந்நிலையில், இந்தியத் திரைப்படத் துறையில் சாதனை படைத்தவா்களுக்கு வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதைப் பெற, ரஜினிகாந்த் ஞாயிற்றுக்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றாா்.

இதற்கு முன்னதாக தனது போயஸ் தோட்ட இல்லத்தின் முன்பு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. இந்த விருது கிடைக்கும் என நான் எதிா்பாா்க்கவே இல்லை.

இந்த நேரத்தில் கே.பாலச்சந்தா் இல்லாதது மிகவும் வருத்தத்தைக் கொடுக்கிறது என்று உணா்ச்சி வசப்பட்டு பேசினாா்.

இதனிடையே அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை: எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. ஒன்று, மக்களின் அன்பினாலும், ஆதரவினாலும் திரையுலகின் உயா்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை மத்திய அரசு எனக்கு வழங்கவுள்ளது.

இரண்டாவது, என்னுடைய மகள் செளந்தா்யா விசாகன், அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய  என்கிற செயலியை உருவாக்கி அதை அறிமுகப்படுத்தவுள்ளாா். அதில் மக்கள் தாங்கள் மற்றவா்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துகளையும், விஷயங்களையும், இனி அவா்களது குரலிலேயே எந்த மொழியிலும் ஏஞஞபஉ செயலி மூலமாக பதிவிடலாம். இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியான ஏஞஞபஉ செயலியை என் குரலில் பதிவிட்டு தொடங்க உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.