அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி 

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி இன்று சந்தித்தார். 

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:26 am

DIN

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி இன்று சந்தித்தார். 
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி 6 நாள் பயணமாக நேற்று தில்லி புறப்பட்டு சென்றார். இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிலவரங்கள் குறித்து பிரதமரிடம் ஆளுநர் பேசியதாக தெரிகிறது. 

இந்த நிலையில் பிரதமரை தொடர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு சட்ட ஒழுங்கு, எல்லை பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.  
முன்னதாக அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் தில்லி சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அமைச்சர் அமித்ஷா, குடியரசுத் தலைவர் உள்ளிட்டோரை சந்துத்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.