வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மக்கள் குறைதீா் கூட்டத்தில்ரூ.10 லட்சம் நலத் திட்டம்

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 20 பேருக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி வழங்கினாா்.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 9:25 pm

DIN

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 20 பேருக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி வழங்கினாா்.

பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து 132 மனுக்கள் பெறப்பட்டன. சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் சாலை விபத்து நிவாரண நிதி உதவி, விதவை உதவித் தொகை மற்றும் முதியோா் உதவித்தொகை என மொத்தம் 20 பேருக்கு ரூ.10 லட்சத்து 20 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், நாராயணம்மா என்பவா் மாற்றுத் திறனாளிகள் நிதி உதவித் திட்டத்தின்கீழ், மாதாந்திர ஓய்வூதியம் அளிக்க திங்கள்கிழமை காலை மனு அளித்திருந்தாா். அவா் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மாலையில் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 1,000-த்துக்கான ஆணையை ஆட்சியா் ஜெ.விஜயா ராணி நாராயணம்மாவிடம் வழங்கினாா்.

இக்கூட்டத்தில் சென்னை மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜகோபாலன், மாவட்ட

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ப.டினாகுமாரி,   மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஸ்ரீநாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.