எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மானாமதுரை, திருப்புவனத்தில் தொடர் மழையால் வீடுகளை சூழ்ந்த தண்ணீர்; மக்கள் அவதி 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வீடுகளை மழைத் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. 

News image
மானாமதுரை அருகே குருந்தன்குளம் கிராமத்தின் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வழியை மறித்து பாதை அமைக்கப்பட்டுள்ளதால்  வீடுகளுக்கு  அருகே குளம்போல் தேங்கியுள்ள மழைத் தண்ணீர்
Updated On :26 அக்டோபர் 2021, 7:45 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வீடுகளை மழைத் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. 

இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த 10 நாள்களாக மானாமதுரை, திருப்புவனம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 
அவ்வப்போது மழை நின்றாலும் அந்த நேரங்களில் குளிர்ந்த காற்று வீசி வருவதால் மக்களுக்கு இந்த காலநிலை இதமாக இருந்து வருகிறது. மழையை பயன்படுத்தி விவசாயிகள் நெல் நடவு பணியை தொடங்கியுள்ளனர். விதைப்பு முறையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நெல் நடவு செய்த விவசாயிகளுக்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

மேலும் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளில் மழைத் தண்ணீர் வரத்தால் கண்மாய், குளங்கள், ஊரணிகள் நிரம்பி வருகின்றன. மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளை மழைத் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. மழைத் தண்ணீர் வெளியேற வழி இல்லாததால் தொடர்ந்து பெய்யும் மழையால் தேங்கி நிற்கும் தண்ணீரின் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. 

மானாமதுரை - சிவகங்கை சாலையில் குருந்தங்குளம் கிராமத்திற்கு தண்ணீர் செல்லும் வழியை மறித்து சாலை அமைக்கும் பணி நடந்து வருவதால் அப்பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது. 

இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்படுகின்றனர். இப்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுத்துறை நிர்வாகத்தை இங்கு வசிக்கும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.