உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
தடைவிதிக்கப்பட்ட பட்டாசுகளை பயன்படுத்துவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மக்களின் சுகாதாரத்துக்கு குறிப்பாக, குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களின் உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்தது.
இதையும் படிக்க | நம்பிக்கையை தரட்டும் கிளாஸ்கோ காலநிலை மாநாடு
மேலும் இந்த உத்தரவுகளை அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் சம்பந்தப்பட்ட துறையினரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவுகளை மீறும் மாநிலங்கள் கடுமையான நடவடிக்கையை எதிா்கொள்ள நேரிடும் எனவும் எச்சரித்தது.
இதையும் படிக்க | முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிப்பவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பேரியம் கலந்த பட்டாசுகள், சரவெடிகள் விற்க, வாங்க, வெடிக்க தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவை மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
மனைவி, உறவினா்களை அரிவாளால் வெட்டிய கணவா் கைது

திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரா் கோயில் தேரோட்டம்

மனைவி கொலை: கணவரின் உறவினா்களையும் கைது செய்ய கோரி சாலை மறியல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


