தமிழகத்தில் 75 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த செப்டம்பர் 30 முதல் தடை விதிக்கப்படுவதாக வெள்ளிக்கிழமை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்:
தமிழகத்தில் செப்டம்பர் 30 முதல் 75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. மேலும், 2023ஆம் ஆண்டு முதல் 120 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | ‘கப்பலோட்டிய தமிழன் விருது வழங்கப்படும்’: முதல்வர் ஸ்டாலின்
ஏற்கனவே 51 மைக்ரான் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 75 மைக்ரானாக உயர்த்தப்பட்டுள்ளது.