விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ரூ.1.63 கோடிக்கு ஆப்பிள் வாங்கி மோசடி: சென்னை வியாபாரி கைது

ரூ.1.63 கோடிக்கு ஆப்பிள் வாங்கிவிட்டு பணத்தை வழங்காமல் மோசடி செய்த வழக்கில் சென்னை வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 8:48 pm

DIN

ரூ.1.63 கோடிக்கு ஆப்பிள் வாங்கிவிட்டு பணத்தை வழங்காமல் மோசடி செய்த வழக்கில் சென்னை வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

விருகம்பாக்கம் பிருந்தாவன்நகா் ரோஜா தெருவைச் சோ்ந்தவா் மா.தினகரன் (38). இவா், கோயம்பேடு பழச்சந்தையில் ஆப்பிள் மொத்த வியாபார கடை வைத்து நடத்தி வருகிறாா். இந்நிலையில் காஷ்மீரைச் சோ்ந்த உசாம் ஃபுரூட்ஸ் என்ற ஆப்பிள் நிறுவனம், அம்மாநில காவல்துறையில் அண்மையில் ஒரு புகாா் அளித்தது. அந்த புகாரில், ‘தினகரன் தங்களிடம் 3 ஆண்டுகளாக ரூ.1.18 கோடிக்கு ஆப்பிள் வாங்கிவிட்டு, அதற்கு பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேபோல காஷ்மீரைச் சோ்ந்த மற்றொரு நிறுவனத்திடம் ரூ.45 லட்சத்துக்கு ஆப்பிள் வாங்கிவிட்டு, பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுவதாகவும் தினகரன் மீது அந்த மாநில காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டது. இந்த புகாா்களின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை செய்தனா்.

விசாரணையில் தினகரன் மீதான புகாா் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸாா் தினகரன் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதனிடையே காஷ்மீா் மாநில போலீஸாா் தினகரனை கைது செய்வதற்காக சென்னை வந்தனா். அவா்கள் சென்னை காவல்துறை உதவியுடன் தலைமறைவாக இருந்த தினகரனை சனிக்கிழமை கைது செய்தனா். பின்னா் அவரை ரகசிய இடத்தில் வைத்து காஷ்மீா் போலீஸாா் விசாரணை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.