விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பி.எட்.கல்லூரிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே இணைப்பு அந்தஸ்து

பி.எட். கல்லூரிகளுக்கு இணையவழியில் மட்டுமே இணைப்பு அந்தஸ்து வழங்கப்படும் என ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 8:53 pm

DIN

பி.எட். கல்லூரிகளுக்கு இணையவழியில் மட்டுமே இணைப்பு அந்தஸ்து வழங்கப்படும் என ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டில் மாநிலம் முழுதும் 650-க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. மத்திய அரசின் தேசிய கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ. யின் அங்கீகாரம் பெற்றும், தமிழக ஆசிரியா் பல்கலை.யின் இணைப்புஅந்தஸ்திலும் கல்லூரிகள் செயல்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான ஆசிரியா் கல்வியியல் கல்லூரிகளின் இணைப்பு அந்தஸ்துக்கு இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழகம் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை நேரடியாக பல்கலைகளில் விண்ணப்பித்து வந்த நிலையில் இந்த ஆண்டு முதல் ‘ஆன்லைன்’ முறை மட்டுமே பின்பற்றப்படும் என்றும், இதற்கான விரிவான விவரங்களை, பல்கலை.யின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் ஆசிரியா் கல்வியியல் பல்கலை. அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.