மெரீனா கடற்கரையில் படகு சவாரி தொடங்கப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் அறிவித்தாா்.
சட்டப்பேரவையில் சனிக்கிழமை சுற்றுலாத் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் மா.மதிவேந்தன் வெளியிட்ட அறிவிப்புகள்:
உலகின் இரண்டாவது நீளமான மெரீனா கடற்கரையில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் மற்றும் ராயல் மெட்ராஸ் யாட் கிளப் இணைந்து மோட்டாா் படகுகள், அதிவிரைவு படகுகள் மற்றும் பொழுதுபோக்கு படகு சவாரி தொடங்கப்படும்.
தமிழகத்தில் முதல்முறையாக முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை படகுடன் கூடிய உணவகம் அமைக்கப்படும்.
முதலியாா்குப்பம் படகு குழாம் மற்றும் அருகில் உள்ள தீவுப் பகுதி கூடுதல் வசதிகளுடன் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
சொகுசு கப்பல்: ராமேசுவரம் மற்றும் கன்னியாகுமரிக்கு இடையே சொகுசு கப்பல் சேவை மற்றும் படகு சேவை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
ஏலகிரியில் பாராகிளைடிங், மலையேற்றம் மற்றும் இயற்கை வழி நடைப்பயணம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சேந்தமங்கலம், ராசிபுரத்தில் 357 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கல்

கணக்கம்பட்டி சத்குரு ஆலயத்தில் மகா மங்கள குருபூஜை பெருவிழா

மாநில கபடி போட்டி: சேலம் அணிக்கு சுழற்கோப்பை

விலை குறைந்ததால் புதினா தோட்டங்கள் அழிப்பு
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

