தமிழகத்தில் அதிகரித்த கரோனா: ஒரேநாளில் 1,592 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் புதிதாக 1,592 பேருக்கு கரோனா இன்று கண்டறியப்பட்டுள்ளது.  
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் புதிதாக 1,592 பேருக்கு கரோனா இன்று கண்டறியப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,62,119 மாதிரிகளும் இதுவரை 4.31 கோடிக்கும் மேற்பட்ட மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதில் புதிதாக 1,592 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 26,22,678ஆக உயர்ந்துள்ளது. 
இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 229 பேருக்கும், சென்னையில் 165 பேருக்கும், செங்கல்பட்டில் 127 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, மேலும் 1,607 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 71,378-ஆக அதிகரித்துள்ளது. 

மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 16,282 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 18 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,018-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com