அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

விநாயகரை அருகிலிருந்து தரிசனம் செய்ய முடியாதது வேதனை:  பக்தர்கள் பேட்டி

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும் ஊர்வலம் செல்வதற்கும் அரசு தடை விதித்துள்ளது.

News image
சேலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அருள்மிகு ராஜகணபதி கோவிலில் தங்ககவசம் சாத்தப்பட்டு விநாயகர் காட்சியளித்தார்.
Updated On :28 ஜனவரி 2024, 4:07 am

DIN

vinayagar chaturthi pooja

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும் ஊர்வலம் செல்வதற்கும் அரசு தடை விதித்துள்ளது. அவரவர் வீட்டில் வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விநாயகர் திருக்கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக சேலத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ராஜகணபதி கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பால்,பன்னீர்,இளநீர் உள்ளிட்ட 16  திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இதையடுத்து அருள்மிகு ராஜகணபதி ராஜகணபதி தங்கக்கவசம் சாட்டப்பட்டது.

பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளிக்காததால் கோவிலுக்கு வெளியே நின்று  திரளான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆண்டுதோறும் ராஜகணபதி திருக்கோவிலில் விநாயகரை அருகிலிருந்து தரிசனம் செய்து விடுவோம். ஆனால் இந்த ஆண்டு விநாயகரை தூரத்திலிருந்து தரிசனம் செய்வது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Story image

கரோனா நோய் தொற்று காரணமாக கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்காததால் வெள்ளிக்கிழமை சேலம் கடைவீதியில் உள்ள ராஜ கணபதி கோயில் வெளியே ராஜகணபதி வணங்கும் பக்தர்கள்.

இனிவரும் காலங்களில் மக்கள் நலமாக வாழ வேண்டும் என்று வேண்டுதல் வைத்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.மேலும் அடுத்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாகக் கொண்டாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.