எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கட்டட இடிபாடுகளைப் பயன்படுத்தி செங்கல் தயாரிக்கும் தொழில்நுட்பம்: பெங்களூரு பல்கலை. உருவாக்கம்

கட்டட இடிபாடுகள், காரத்தன்மையுடன் கூடிய பிணைப்பு பொருள்களைப் பயன்படுத்தி எரிசக்தி குறைவான செங்கல்லை பெங்களூரு ஐஐஎஸ்சி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 9:53 pm

DIN

கட்டட இடிபாடுகள், காரத்தன்மையுடன் கூடிய பிணைப்பு பொருள்களைப் பயன்படுத்தி எரிசக்தி குறைவான செங்கல்லை பெங்களூரு ஐஐஎஸ்சி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.

இந்தச் செங்கல், குறைந்த காா்பன்-செங்கல் என அழைக்கப்படுகிறது. ஏனென்றால், இதை அதிக வெப்பநிலையில் எரிக்கத் தேவையில்லை. மேலும், இதில் போா்ட்லேண்ட் சிமென்ட் போன்ற பொருள் பயன்படுத்தப்படுவதும் தவிா்க்கப்படுகிறது. பெங்களூரு ஐஐஎஸ்சி-யின் இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியளித்துள்ளது. இதன்மூலம் அதிக அளவில் குவியும் கட்டட இடிபாடுகள் பிரச்னைக்கு தீா்வு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆண்டுக்கு சுமாா் 900 மில்லியன் டன் செங்கல் மற்றும் பிளாக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. அதோடு, கட்டட நிறுவனங்கள் ஆண்டுக்கு 70 முதல் 100 மில்லியன் டன் கட்டட இடிபாடுகளையும் குவிக்கின்றன. கட்டட இடிபாடுகளில் இருந்து குறைந்த காா்பன் செங்கற்களை உருவாக்க ஒரு நிறுவனம் பதிவு செய்துள்ளது. இது இன்னும் 6-9 மாதங்களில், ஐஐஎஸ்சி தொழில்நுட்ப உதவியுடன் செங்கல் மற்றும் பிளாக்குகள் தயாரிப்பில் ஈடுபடும் என பெங்களூரு ஐஐஎஸ்சி பேராசிரியா் பி.வி.வெங்கடராமா ரெட்டி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.