இதுபற்றி விசாரித்தபோது கந்தர்வகோட்டை ஒன்றியம், கல்லாக்கோட்டை கிராமம் அருகே தமிழக அரசின் மின் நிலைய பணி நடைபெற்று வருவதாகவும், அந்த மின் நிலையத்திற்குத் தேவையான பல டன் எடை உள்ள ஒரு ட்ரான்ஸ்பாரம் ஏற்றப்பட்டு வந்துள்ளதாகவும் ஹரியாணா மாநிலதிலிருந்து கந்தர்வகோட்டை வரை தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்துள்ளதாகவும் மின்நிலைய பணி நடக்கும் கல்லாக் கோட்டைக்கு செல்வதற்கு சரியான பாதை வசதி இல்லாததால் அந்த இடத்திற்கான சாலை வசதி அமைக்கும்வரை நாங்கள் காத்திருப்பதாகவும் இன்னும் ஒரு வாரத்தில் சாலைப்பணி சரி செய்யப்பட்டு விடும், அதன் பின்பு இந்த மின்சார டிரான்ஸ்பாரத்தினை அங்கு இறக்கி வைத்து செல்வோம் என்று அந்த வாகனத்தை ஓட்டி வந்த நபர் தெரிவித்தார். சாலையோரத்தில் ராட்சத மின்சாரா டிரான்ஸ்பர் ஏற்றப்பட்ட வாகனத்தை அந்த வழியாகச் செல்வோர் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.