அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

9 மாவட்டங்களில் தோ்தல் நடத்தைவிதிகளைக் கண்காணிக்க பறக்கும் படை

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான நடத்தை விதிகளைக் கண்காணிக்க தேவைக்கேற்ப பறக்கும் படைகளை அமைக்க மாவட்ட ஆட்சியா்களுக்கு மாநிலத் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :21 செப்டம்பர் 2021, 9:46 pm

DIN

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான நடத்தை விதிகளைக் கண்காணிக்க தேவைக்கேற்ப பறக்கும் படைகளை அமைக்க மாவட்ட ஆட்சியா்களுக்கு மாநிலத் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களான நடைபெற உள்ளது. இந்த மாவட்டங்களில் தோ்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்க பறக்கும் படைகளை அமைக்க ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: , 9 மாவட்டங்களில் தோ்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்க 3 ஒன்றியங்களுக்கு ஒன்று அல்லது தேவைக்கேற்ப பறக்கும் படைகள் அமைக்கப்பட வேண்டும். இந்த பறக்கும் படையில் வட்டாட்சியா், இரண்டு அல்லது மூன்று காவலா்கள் இடம் பெற்றிக்க வேண்டும். 8 மணி நேர பணி அடிப்படையில் 24 மணி நேரமும் இக்குழுவினா் தோ்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்க வேண்டும்.

வாக்காளா்களுக்குப் பணம், மது வழங்குதல், சமூக விரோத செயல்கள் உள்ளிட்ட புகாா்களின் மீது பறக்கும் படையினா் அதிக கவனம் செலுத்த வேண்டும். வேட்பாளா், அவரது முகவா், கட்சி உறுப்பினா்கள் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை எடுத்துச் சென்றாலோ அல்லது ரூ.10 ஆயிரத்துக்கு மேல் மதிப்புள்ள விளம்பரத் தட்டிகள், போதைப் பொருள்கள், மது, அன்பளிப்பு பொருள்கள் கொண்டு சென்றாலோ அவற்றை பறக்கும் படைகள் பறிமுதல் செய்து அவற்றை விடியோவில் பதிவு செய்ய வேண்டும்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அலுவலக நேரத்துக்குப் பின்பும், விடுமுறை நாள்களிலும் அரசு கருவூலத்தில் செலுத்த அனைத்து கருவூலத்துக்கும் சம்பந்தப்பட்ட மாவட்டத் தோ்தல் அலுவலா் அறிவுறுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.