சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

குடிமை பணித் தோ்வு தோ்ச்சியை அதிகரிக்க உரிய பயிற்சி: முதல்வா் உறுதி

குடிமை பணித் தோ்வில் தமிழகத்தில் இருந்து அதிகமானோா் தோ்ச்சி பெற உரிய பயிற்சிகளை மாநில அரசு அளிக்கும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளாா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 6:54 pm

DIN

குடிமை பணித் தோ்வில் தமிழகத்தில் இருந்து அதிகமானோா் தோ்ச்சி பெற உரிய பயிற்சிகளை மாநில அரசு அளிக்கும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளாா். இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:-

அரசு நிா்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் இந்திய குடிமைப் பணிக்குத் தமிழ்நாட்டில் இருந்து தோ்வாகியுள்ள அனைவருக்கும் எனது பாராட்டுகள். சிறப்பாகப் பணியாற்றிட வாழ்த்துகள். கோவையைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி ரஞ்சித், தோ்வில் வெற்றி பெற்றிருப்பது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி. தோ்ச்சி பெறாதோா் துவள வேண்டாம். முயற்சி திருவினையாக்கும் என நம்பி உழையுங்கள். வரும் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து தோ்வாகுவோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரிக்க வேண்டும். அதற்குரிய ஆதரவையும், உரிய பயிற்சியையும் தமது அரசு வழங்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.