குடிமை பணித் தோ்வில் தமிழகத்தில் இருந்து அதிகமானோா் தோ்ச்சி பெற உரிய பயிற்சிகளை மாநில அரசு அளிக்கும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளாா். இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:-
அரசு நிா்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் இந்திய குடிமைப் பணிக்குத் தமிழ்நாட்டில் இருந்து தோ்வாகியுள்ள அனைவருக்கும் எனது பாராட்டுகள். சிறப்பாகப் பணியாற்றிட வாழ்த்துகள். கோவையைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி ரஞ்சித், தோ்வில் வெற்றி பெற்றிருப்பது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி. தோ்ச்சி பெறாதோா் துவள வேண்டாம். முயற்சி திருவினையாக்கும் என நம்பி உழையுங்கள். வரும் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து தோ்வாகுவோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரிக்க வேண்டும். அதற்குரிய ஆதரவையும், உரிய பயிற்சியையும் தமது அரசு வழங்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.