நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தம்மம்பட்டியில் முதியோர் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் முதியோர் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

News image

தம்மம்பட்டியில் முதியோர் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

Updated On :30 செப்டம்பர் 2021, 10:03 am

DIN

தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் முதியோர்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

பள்ளிக்கல்வித் துறையும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து முதியோர்களுக்கு கல்வி புகட்டும் 'கற்போம் எழுதுவோம்' திட்டத்தில் முதியோர் அனைவரையும் எழுத்தறிவு பெற வைக்கும் நோக்கில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்றது.

இதற்கு கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலர் அந்தோணிமுத்து தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் இராஜலிங்கம், ஆசிரியப் பயிற்றுநர்கள் சுப்ரமணியன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை அனைத்து மாணவர்களும் கண்டுகளித்தனர்.

இதேபோல் கூடமலை அரசு மேனிலைப் பள்ளியிலும், கெங்கவல்லி சந்தைப்பேட்டை பகுதியிலும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.