புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தமிழகத்தை பிரிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு விளக்கம்

தமிழகத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய இணையமைச்சர் நித்யானந்த ராய் விளக்கம் அளித்துள்ளார்.

News image
தமிழகத்தை பிரிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு விளக்கம்
Updated On :3 ஆகஸ்ட் 2021, 7:19 am

DIN


புது தில்லி: தமிழகத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய இணையமைச்சர் நித்யானந்த ராய் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய இணையமைச்சர் எல். முருகனின் சுய விவரக் குறிப்பில் கொங்குநாடு என்ற வார்த்தை இடம்பெற்றிருந்த நிலையில், அது தொடர்பாக சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை எம்பிக்கள் பாரிவேந்தர் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு, உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

அதில், தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று தெரிவித்திருந்தார். இதன் மூலம், கொங்குநாடு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.