உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவது உறுதி என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
இதையும் படிக்க- தமிழ் படைப்புகள் நீக்கப்பட்டது ஏன்? தில்லி பல்கலை. விளக்கம்
அப்போது பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவது உறுதி என்று கூறினார். அதேசமயம், உள்ளாட்சித் தேர்தலில் இரு பெரும் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட முடிவு செய்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.