சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 189 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று 183 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 173 பேரும், தஞ்சாவூரில் 98 பேரும், திருப்பூரில் 67 பேரும், திருவள்ளூரில் 64 பேரும், நாமக்கல்லில் 57 பேரும், சேலத்தில் 52 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 22 பேர் உயிரிழந்த நிலையில், இதில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 4 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.