தமிழகத்தில் புதிதாக 1,512 பேருக்கு கரோனா; 22 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,512 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 22 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் புதிதாக 1,512 பேருக்கு கரோனா; 22 பேர் பலி
தமிழகத்தில் புதிதாக 1,512 பேருக்கு கரோனா; 22 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,512 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 22 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் நேற்று 1,523 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை திங்கள் கிழமை (ஆக. 30) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக 1,512 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 26,14,872-ஆக உயர்ந்துள்ளது.

இன்று பலி எண்ணிக்கை 22-ஆக அதிகரித்துள்ளது. இது வரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,921-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து 1,725 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,63,101-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 16,850 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com